Monday, 27 February 2012

என் கவிதை படங்கள் ...

நீ நிற்பதாய்
தோன்றியே..
தினம் தினம்
சீன் போடுகிறேன் ...

                                                  - எங்கேயும்    எப்போதும்..


நான் சிரிப்பதா
இல்லை அழுவதா..
நீயே சொல்..
தினமும்  இரவில்..  நீ
உன் காதலை சொல்லும் போது ..

                                              - - முப்பொழுதும் உன் கற்பனைகள்


நீ வருவாய் என
எண்ணிய விழிகள்..
நீயோ வராத பொழுதிலும் 
கூட நீ நேற்று நின்ற
இடத்தயே வட்டமிடுகிறதே..
எனது கண்களுக்கும்
தேனை  நுகரும் தேனீக்களுக்கும்
என்ன தொடர்பு...

                                         - உன்னை கண் தேடுதே..


சுதந்திரமாய் திரிந்த
அவளது விரல்கள்..
ஜடை பின்னுகிறது
என்னை கண்டவுடன்
இது என்ன வெட்கமா..
இல்லை டூ விடுகிறாளா..

                                                        -      டூ 


தங்கமும் பிளாட்டினமும்
தாறுமாறாய் ஏறி கொண்டிருக்க 
நீ மட்டும் தரையில் 
மிக தைரியமாய் 
நடமாடி கொண்டிருக்கிறாய்..
காவலுக்கு வரட்டுமா.. காதலுடன்

                                                             -   காவலன்